thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalதுறவுThuravu
குறள் 349

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

Patratra Kanne Pirapparukkum Matru

Nilaiyaamai Kaanap Patum

Bondage cut off, rebirth is off The world then seems instable stuff

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

MK (மு.கருணாநிதி)

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்

Couplet

When that which clings falls off, severed is being's tie;All else will then be seen as instability

Explanation

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen