thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalதுறவுThuravu
குறள் 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

Patri Vitaaa Itumpaikal Patrinaip

Patri Vitaaa Thavarkku

Grief clings on and on to those Who cling to bonds without release

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

SP (சாலமன் பாப்பையா)

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

MK (மு.கருணாநிதி)

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

Couplet

Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp

Explanation

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire