thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalதுறவுThuravu
குறள் 341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal

Adhanin Adhanin Ilan

From what from what a man is free From that, from that his torments flee

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

SP (சாலமன் பாப்பையா)

எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

MK (மு.கருணாநிதி)

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை

Couplet

From whatever, aye, whatever, man gets free,From what, aye, from that, no more of pain hath he

Explanation

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain