thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalதுறவுThuravu
குறள் 342

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.

Ventin Un Taakath Thurakka

Thurandhapin Eentuiyar Paala Pala

Give up all to gain the True And endless joys shall hence seek you

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

SP (சாலமன் பாப்பையா)

பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

MK (மு.கருணாநிதி)

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்

Couplet

'Renunciation' made- ev'n here true pleasures men acquire;'Renounce' while time is yet, if to those pleasures you aspire

Explanation

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)