thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

Pukkil Amaindhindru Kollo Utampinul

Thuchchil Irundha Uyirkku

The life berthed in this body shows A fixed home it never knows

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

SP (சாலமன் பாப்பையா)

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!

MK (மு.கருணாநிதி)

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது

Couplet

The soul in fragile shed as lodger courts repose:-Is it because no home's conclusive rest it knows

Explanation

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home