அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku
The life berthed in this body shows A fixed home it never knows
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
SP (சாலமன் பாப்பையா)
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
MK (மு.கருணாநிதி)
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது
Couplet
The soul in fragile shed as lodger courts repose:-Is it because no home's conclusive rest it knows
Explanation
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home