thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

Urangu Vadhupolunj Chaakkaatu Urangi

Vizhippadhu Polum Pirappu

Death is like a slumber deep And birth like waking from that sleep

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

MK (மு.கருணாநிதி)

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு

Couplet

Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep

Explanation

Death is like sleep; birth is like awaking from it