thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 338

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

Kutampai Thaniththu Ozhiyap Pulparan

Thatre Utampotu Uyiritai Natpu

The soul from body any day Like bird from egg-shell flies away

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

MK (மு.கருணாநிதி)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்

Couplet

Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share

Explanation

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty