thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 332

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

Kooththaattu Avaik Kuzhaath Thatre

Perunjelvam Pokkum Adhuvilin Thatru

Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

MK (மு.கருணாநிதி)

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்

Couplet

As crowds round dancers fill the hall, is wealth's increase;Its loss, as throngs dispersing, when the dances cease

Explanation

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly