thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalநிலையாமைNilaiyaamai
குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal

Arkupa Aange Seyal

Wealth wanes away; but when it comes Take care to do enduring things

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

MK (மு.கருணாநிதி)

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்

Couplet

Unenduring is all wealth; if you wealth enjoy,Enduring works in working wealth straightway employ

Explanation

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable