உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
Uyir Utampin Neekkiyaar Enpa
Seyir Utampin Sellaaththee Vaazhkkai
The loathsome poor sickly and sore Are killers stained by blood before
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
SP (சாலமன் பாப்பையா)
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
MK (மு.கருணாநிதி)
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்
Couplet
Who lead a loathed life in bodies sorely pained,Are men, the wise declare, by guilt of slaughter stained
Explanation
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)