thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar

Punmai Therivaa Rakaththu

Those who live by slaying are Eaters of carrion bizarre!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

SP (சாலமன் பாப்பையா)

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.

MK (மு.கருணாநிதி)

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்

Couplet

Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know

Explanation

To minds of them who what is vileness know