அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar
Punmai Therivaa Rakaththu
Those who live by slaying are Eaters of carrion bizarre!
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
SP (சாலமன் பாப்பையா)
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.
MK (மு.கருணாநிதி)
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்
Couplet
Whose trade is 'killing', always vile they show,To minds of them who what is vileness know
Explanation
To minds of them who what is vileness know