thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Araththinooungu Aakkamum Illai Adhanai

Maraththalin Oongillai Ketu

Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

MK (மு.கருணாநிதி)

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

Couplet

No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws

Explanation

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it