thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 31

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Sirappu Eenum Selvamum Eenum

Araththinooungu Aakkam Evano Uyirkku

From virtue weal and wealth outflow; What greater good can mankind know?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

SP (சாலமன் பாப்பையா)

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

MK (மு.கருணாநிதி)

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Couplet

It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain

Explanation

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?