அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
Andhanar Enpor Aravormar Revvuyir
Kkum Sendhanmai Poontozhuka Laan
With gentle mercy towards all, The sage fulfils the vitue's call
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
SP (சாலமன் பாப்பையா)
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
MK (மு.கருணாநிதி)
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்
Couplet
Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give
Explanation
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness