குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu
Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
MK (மு.கருணாநிதி)
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது
Couplet
The wrath 'tis hard e'en for an instant to endure,Of those who virtue's hill have scaled, and stand secure
Explanation
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted