அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
Maraththal Vekuliyai Yaarmaattum Theeya
Piraththal Adhanaan Varum
Off with wrath with any one It is the source of sin and pain
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
SP (சாலமன் பாப்பையா)
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
MK (மு.கருணாநிதி)
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
Couplet
If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget
Explanation
Forget anger towards every one, as fountains of evil spring from it