thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.

Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum

Iladhanin Theeya Pira

Vain is wrath against men of force Against the meek it is still worse

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை

Couplet

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still

Explanation

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil