thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalவெகுளாமைVekulaamai
குறள் 301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்?

Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk

Kaakkinen Kaavaakkaal En?

Anger against the weak is wrong It is futile against the strong

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

SP (சாலமன் பாப்பையா)

எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

MK (மு.கருணாநிதி)

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

Couplet

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein

Explanation

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?