thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalவாய்மைVaaimai
குறள் 291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum

Theemai Ilaadha Solal

If \"What is truth\"? the question be, It is to speak out evil-free

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

MK (மு.கருணாநிதி)

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

Couplet

You ask, in lips of men what 'truth' may be;'Tis speech from every taint of evil free

Explanation

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)