அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalவாய்மைVaaimai
குறள் 292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha
Nanmai Payakkum Enin
E'en falsehood may for truth suffice, When good it brings removing vice
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
SP (சாலமன் பாப்பையா)
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
MK (மு.கருணாநிதி)
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்
Couplet
Falsehood may take the place of truthful word,If blessing, free from fault, it can afford
Explanation
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault