thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.

Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth

Thallaadhu Puththe Lulaku

Even the body rejects thieves; The honest men, heaven receives

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

SP (சாலமன் பாப்பையா)

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

MK (மு.கருணாநிதி)

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

Couplet

The fraudful forfeit life and being here below;Who fraud eschew the bliss of heavenly beings know

Explanation

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud