அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar
They perish in their perfidy Who know nothing but pilfery
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
SP (சாலமன் பாப்பையா)
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
MK (மு.கருணாநிதி)
அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்
Couplet
Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die
Explanation
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression