thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalதவம்Thavam
குறள் 268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

Thannuyir Thaanarap Petraanai Enaiya

Mannuyi Rellaan Thozhum

He worship wins from every soul Who Master is by soul control

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

MK (மு.கருணாநிதி)

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்

Couplet

Who gains himself in utter self-control,Him worships every other living soul

Explanation

All other creatures will worship him who has attained the control of his own soul