thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalதவம்Thavam
குறள் 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch

Utachchuta Norkir Pavarkku

Pure and bright gets the gold in fire; and so the life by pain austere

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

SP (சாலமன் பாப்பையா)

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

MK (மு.கருணாநிதி)

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்

Couplet

The hotter glows the fining fire, the gold the brighter shines;The pain of penitence, like fire, the soul of man refines

Explanation

Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)