thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுகழ்Pukazh
குறள் 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa

Yaakkai Poruththa Nilam

The land will shrink in yield if men O'erburden it without renown

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

SP (சாலமன் பாப்பையா)

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

MK (மு.கருணாநிதி)

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்

Couplet

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown

Explanation

The ground which supports a body without fame will diminish in its rich produce