thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுகழ்Pukazh
குறள் 238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum

Echcham Peraaa Vitin

To men on earth it is a shame Not to beget the child of fame

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

SP (சாலமன் பாப்பையா)

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்

Couplet

Fame is virtue's child, they say; if, then,You childless live, you live the scorn of men

Explanation

Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world