thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுகழ்Pukazh
குறள் 240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya

Vaazhvaare Vaazhaa Thavar

They live who live without blemish The blameful ones do not flurish

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

SP (சாலமன் பாப்பையா)

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

MK (மு.கருணாநிதி)

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்

Couplet

Who live without reproach, them living men we deem;Who live without renown, live not, though living men they seem

Explanation

Those live who live without disgrace Those who live without fame live not