thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒப்புரவறிதல்Oppuravaridhal
குறள் 211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu

En Aatrung Kollo Ulaku

Duty demands nothing in turn; How can the world recompense rain?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?

MK (மு.கருணாநிதி)

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்

Couplet

Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given

Explanation

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?