அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஒப்புரவறிதல்Oppuravaridhal
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku
Velaanmai Seydhar Poruttu
All the wealth that toils give Is meant to serve those who deserve
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
SP (சாலமன் பாப்பையா)
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
MK (மு.கருணாநிதி)
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
Couplet
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours
Explanation
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence