thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalகடவுள் வாழ்த்துKatavul Vaazhththu
குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan

Natraal Thozhaaar Enin

That lore is vain which does not fall At His good feet who knoweth all

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

SP (சாலமன் பாப்பையா)

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

MK (மு.கருணாநிதி)

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

Couplet

No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore

Explanation

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?