மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar
Long they live on earth who gain The feet of God in florid brain
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
SP (சாலமன் பாப்பையா)
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
MK (மு.கருணாநிதி)
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
Couplet
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plain
Explanation
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds