thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalகடவுள் வாழ்த்துKatavul Vaazhththu
குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

Akara Mudhala Ezhuththellaam Aadhi

Pakavan Mudhatre Ulaku

'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

SP (சாலமன் பாப்பையா)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

MK (மு.கருணாநிதி)

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Couplet

A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains

Explanation

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world