thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுறங்கூறாமைPurangooraamai
குறள் 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum

Thirandherindhu Koorap Patum

His failings will be found and shown, Who makes another's failings known

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

MK (மு.கருணாநிதி)

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

Couplet

Who on his neighbours' sins delights to dwell,The story of his sins, culled out with care, the world will tell

Explanation

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published