thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுறங்கூறாமைPurangooraamai
குறள் 185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.

Aranjollum Nenjaththaan Anmai Puranjollum

Punmaiyaar Kaanap Patum

Who turns to slander makes it plain His praise of virtue is in vain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

MK (மு.கருணாநிதி)

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

Couplet

The slanderous meanness that an absent friend defames,'This man in words owns virtue, not in heart,' proclaims

Explanation

The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back