thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுறங்கூறாமைPurangooraamai
குறள் 184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்.

Kannindru Kannarach Chollinum Sollarka

Munnindru Pinnokkaach Chol

Though harsh you speak in one's presence Abuse is worse in his absence

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

MK (மு.கருணாநிதி)

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

Couplet

In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought

Explanation

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it