புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum
Virtue thinks it better to die, Than live to backbite and to lie
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
SP (சாலமன் பாப்பையா)
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
MK (மு.கருணாநிதி)
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று
Couplet
'Tis greater gain of virtuous good for man to die,Than live to slander absent friend, and falsely praise when nigh
Explanation
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out