thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுறங்கூறாமைPurangooraamai
குறள் 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

Pakachchollik Kelirp Pirippar Nakachcholli

Natpaatal Thetraa Thavar

By pleasing words who make not friends Sever their hearts by hostile trends

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

SP (சாலமன் பாப்பையா)

கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

MK (மு.கருணாநிதி)

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்

Couplet

With friendly art who know not pleasant words to say,Speak words that sever hearts, and drive choice friends away

Explanation

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives