நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin
The ocean's wealth will waste away, Except the cloud its stores repay
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
SP (சாலமன் பாப்பையா)
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
MK (மு.கருணாநிதி)
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்
Couplet
If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean's wide domain
Explanation
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)