thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

Sirappotu Poosanai Sellaadhu Vaanam

Varakkumel Vaanorkkum Eentu

The earth, beneath a barren sky, Would offerings for the gods deny

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது

SP (சாலமன் பாப்பையா)

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது

MK (மு.கருணாநிதி)

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

Couplet

If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore

Explanation

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials