அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalவான்சிறப்புVaansirappu
குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu
No grassy blade its head will rear, If from the cloud no drop appear
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
SP (சாலமன் பாப்பையா)
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
MK (மு.கருணாநிதி)
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
Couplet
If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head
Explanation
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen