கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai
Destruction it may sometimes pour But only rain can life restore
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
SP (சாலமன் பாப்பையா)
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்
MK (மு.கருணாநிதி)
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்
Couplet
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise
Explanation
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune