thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar

Vazhukka�yum Keteen Padhu

Man shall be wrecked by envy's whim Even if enemies spare him

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

SP (சாலமன் பாப்பையா)

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

MK (மு.கருணாநிதி)

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

Couplet

Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate

Explanation

To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction