அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
SP (சாலமன் பாப்பையா)
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
MK (மு.கருணாநிதி)
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
Couplet
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause
Explanation
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds