thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.

Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam

Penaadhu Azhukkarup Paan

Who envies others' good fortune Can't prosper in virtue of his own

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்

MK (மு.கருணாநிதி)

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்

Couplet

Nor wealth nor virtue does that man desire 'tis plain,Whom others' wealth delights not, feeling envious pain

Explanation

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."