thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum

Azhukkaatrin Anmai Perin

No excellence excels the one That by nature envies none

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை

Couplet

If man can learn to envy none on earth,'Tis richest gift, -beyond compare its worth

Explanation

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others