thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum

Unpadhooum Indrik Ketum

Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

MK (மு.கருணாநிதி)

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்

Couplet

Who scans good gifts to others given with envious eye,His kin, with none to clothe or feed them, surely die

Explanation

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment