thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai

Innaachchol Norkir Pavar

More than ascetics they are pure Who bitter tongues meekly endure

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

MK (மு.கருணாநிதி)

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

Couplet

They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure

Explanation

Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics