thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham

Thakudhiyaan Vendru Vital

By noble forbearance vanquish The proud that have caused you anguish

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

MK (மு.கருணாநிதி)

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்

Couplet

With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail

Explanation

Let a man by patience overcome those who through pride commit excesses