thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

Thiranalla Tharpirar Seyyinum Nonondhu

Aranalla Seyyaamai Nandru

Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

SP (சாலமன் பாப்பையா)

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது

MK (மு.கருணாநிதி)

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

Couplet

Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep

Explanation

Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue