thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 160

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

Unnaadhu Norpaar Periyar Pirarsollum

Innaachchol Norpaarin Pin

Who fast are great to do penance Greater are they who bear offence

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

MK (மு.கருணாநிதி)

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்

Couplet

Though 'great' we deem the men that fast and suffer pain,Who others' bitter words endure, the foremost place obtain

Explanation

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others